அதுகேட்ட நம்பி, வேதியனே! இப்பூம்பொழில் வாளேந்திய மறவர் பலர் புரிசையிடத்தே இருந்து காக்கப்படுவதாகவும், நீ காவலற்றது என்றற்குக் காரணம் யாது என்றான் என்க. |
(452) |
|
விதூடகன் ஈண்டு கள்வரைக் கண்டேன் எனல் |
1583. | 1அருமு கத்தகனி யாயின வெல்லாம் ஒருமு கத்தனக ளன்றியு திர்த்துத் தருமு கத்தர்வரு வார்தறு கண்ணார் கருமு கத்தருளர் காவல்களி லென்றான். |
(இ - ள்.) அருமுகத்த கனி ஆயின எல்லாம் - பெறற்கரிய பருவம் வாய்ந்த கனிகள் எல்லாம், ஒரு முகத்தனகள் அன்றி - ஒரு திசையினன்றிப் பல திசைகளிடத்தும் வீழ்வனவாம்படி, உதிர்த்து - உதிரும்படி செய்து, தருமுகத்தர் - மரங்களிடத்தேயே எப்பொழுதும் வாழ்வாராய், வருவார் - வருகின்ற, தறுகண்ணார் - இரக்கமிலாக் கயவர்கள், கருமுகத்தர் உளர் - கரிய முகத்தையுடைய கள்வர் பலர் ஈண்டுள்ளனர், காவல்கள் இல் என்றான் - அக்கள்வரைக் கடியும் காவல் ஈண்டில்லை என்று கூறினான், (எ - று.) அரு முகத்த கனிய - அரிய பருவம் வாய்ந்த கனி என்க. அரிய கனிகள் நான்கு திசைகளினும் வீழும்படி உதிர்க்கின்ற தறு கண்ணராகிய கரிய முகங்களையுடைய கள்வர் பலர் மரங்களிலே உளர்; காவலரோ ஒருவருமிலர் என்றான் என்க. |
(453) |
|
திவிட்டன் விதூடகனை அசதியாடல் |
1584. | யாவர் யாவரவ ரெங்குள ரென்னக் காவு மேவுமுசு வின்கலை காட்ட 2வாவவர் கள் 3வரத னாலெழு நாம்போய்த் தேவி காவுநனி சேர்குவ மென்றான். |
(இ - ள்.) யாவர் யாவர் - யார்! யார்!, அவர் எங்குளர் என்ன - அத்தகைய கள்வர் எவ்விடத்தே உள்ளனர் என்று அரசன் விரைந்து வினவ, காவு மேவும் முசுவின் கலைகாட்ட - விதூடகன் அப்பொழிலிடத்தே உறையும் ஆண் குரங்குகளைக் காட்டினனாக; ஆ அவர் கள்வர் அதனால் எழுநாம் போய் - அந்தோ அவர் கள்வர்கள்தாம் ஆகையாலே விரைந்து எழுக யாம் சென்று, தேவி காவு - இக்கள்வர் வாராத சுயம்பிரபையின் பொழிலை, நனிசேர்குவம் - விரைந்து எய்துவோம், என்றான் - என்று திவிட்டன் அஞ்சினான்போற் கூறினான், (எ - று.) |
|
|
(பாடம்) 1 அருமுகத்த களியாயின. 2 வாவர்கள். 3 வரசனாலெழு நாம்போய்த். |