பக்கம் : 987
 

     தமாலவீதி - பச்சிலைமரச் செறிவூடே செல்லும் வழி.

     தமால வீதியைக் கண்டு இருள் என வேதியன் அஞ்ச, நம்பி, இது இருளன்று
சோலையே காண் எனத் தெருட்ட, வேதியன் அச்சம் நீங்கினான் என்க.

(456)

 

மகிழமரம் கவசமணிந்ததேன்? எனல்

1587. வாலிதழ் வீழ்தரு 1மகிழ்தன் றாண்முதற்
சாலிகை புக்கது தயங்கு தாரினாய்
சோலையு 2மமர்த்தொழி றொடங்கு மோவென
வேலைநீர் வண்ணனை வெருண்டு நோக்கினான்.
 
     (இ - ள்.) வால் இதழ் வீழ்தரு மகிழ் - தூயமலரை உகுக்கின்ற மகிழமரம், தன்
தாள்முதல் - தனது அடிப்பகுதியிலே, சாலிகை புக்கது - கவசம் அணிந்துளது, தயங்கு
தாரினாய் - திகழ்கின்ற மாலையை யுடையோய், சோலையும் - இதுபோன்ற பொழில்களும்,
அமர்த்தொழில் தொடங்குமோ என - போர்த்தொழில் செய்வதுண்டேயோ என்று
வினவியவாறே, வேலை நீர் வண்ணனை - கடல்வண்ணனாகிய திவிட்டனை, வெருண்டு -
உளம் வெருண்டவனாய், நோக்கினான் - பார்த்தான், (எ - று.)

     மகிழமரம் கவசம் அணிந்துளது; சோலைகளும் அரசர் போன்று போர்க்குச்
செல்லுதல் உண்டோ என, அஞ்சி நம்பியை வினவினான், என்க.

(457)

 

நம்பியின் விடை

1588. அஞ்சலிங் கமர்த்தொழி லில்லை யாவதும்
மஞ்சிவர் 3மகிழந்தன் வயவு நோய்கெடூஉப்
பஞ்சிவ ரல்குலார் பவழ வாயினால்
அஞ்சுவை 4நறவமீங் குமிழ ஆனதே.
 
     (இ - ள்.) அஞ்சல் - பார்ப்பன மகனே அஞ்சாதே கொள், இங்கு - இவ்விடத்தே,
யாவதும் - ஒருசிறிதும், அமர்த்தொழில் இல்லை - போர்த் தொழில் நிகழமாட்டாது, மஞ்சு
இவர் மகிழந்தன் - முகில்தவழும் இம்மகிழ மரத்தினுடைய, வயவுநோய், கெடூஉ -
வயவுநோய் அகலும் பொருட்டு,
 

     (பாடம்) 1 மகிழதன். 2 மாத்தொழில். 3மகிழந்தன.
4 நறவறங்குமிழப்பட்டதே, நறவமிங்குழப்பமிட்டதே.