பக்கம் : 990 | | | கலைத்தலை மகளிர்தங் காமர் சீறடி அலத்தகச் சுடரென வறியக் காட்டினான். | (இ - ள்.) இலைத்தலை ஈர்ந்தளிர் அல்ல - இலைக்கு முதலாகின்ற ஈரிய தளிர்கள் அல்ல, ஈங்கு இதன் - இவ்வசோகின், மலைத்தகு வயவுநோய் தீர - திகைப்பைச் செய்யத் தகுந்த வயவுப் பிணி தீரும் பொருட்டு, கலைத்தலை மகளிர் - கலைத்தொழிலிலே தலையாய மகளிர்கள், தம் காமர் சீறடி - தம்முடைய அழகிய சிற்றடிகளாலே, வைத்தன - வைக்கப்பட்டன வாகிய, அலத்தகச் சடர் - செம்பஞ்சுக்குழம்பின் ஒளிகளாம், என - என்று, அறியக் காட்டினான் - அவ்விதூடகன் உணருமாறு உரைத்தான், (எ - று.) அதுகேட்ட நம்பி, விதூடக! இவ்வசோக மரத்தின் அடிப் பகுதியிலே தோன்றுவன தளிர்கள் அல்ல; அவை, மகளிர்கள் இதன் வயவு நோய் தீர்த்தற் பொருட்டுத் தம் அடிகளால் மிதித்தபொழுது அவ்வடிகளின் அலத்தகக் குழம்புபட்ட குறிகளேகாண் என்றான் என்க. | (461) | | விதூடகன் திவிட்டனை அசதியாடல் | 1593. | 1காவிவாய் விலங்கிய கருங்கண் வெம்முலைத் தேவியார் சீறடி சென்னி சேர்த்தலும் மேவியாங் கலர்ந்திடு நின்னை வென்றதால் ஆவியா ரசோகின தமைதி வண்ணமே. | (இ - ள்.) வாய் விலங்கிய காவி கருங்கண் - வாய்விரிந்த நீலோற்பல மலர் போன்ற கரிய கண்களையும், வெம்முலைத் தேவியார் - விருப்பந்தரும் முலைகளையும் உடைய கோப்பெருந்தேவியார், சீறடி - சிறிய அடிகளை, சென்னி சேர்த்தலும் - உன்னுடைய முடியிலே சூட்டியபோது, மேவி - விரும்பி, ஆங்கு - அப்போது, அலர்ந்திடும் - மனமகிழ்கின்ற, நின்னை - வேந்தனாகிய உன்னை, ஆவியார் அசோகினது அமைதிவண்ணம் - மணம் பொருந்திய இவ்வசோக மரத்தினது பெருந்தன்மை, வென்றது ஆல் - வென்றுவிட்டது ஆகும், (எ - று.) மகளிர் சிற்றடி நின் முடியிலே பட்டால் நீ மகிழ்கன்றனை; இவ்வசோகம் தன் அடியில் அவர் அடிபடுந்துணையானே மலர்வதனால் உன்னை வென்றது என்றான் என்க. | (462) | | திவிட்டன் மலர்மாலையால் விதூடகனைப் புடைத்தலும் அவன் அச்சுறுத்தலும் | 1594 | .மாதவன் மொழிதலு மன்ன னாங்கொரு போதினாற் புடைத்தனன் புடைத்த லோடுமிங் | |
| (பாடம்) 1 காவியால். | | |
|
|