பக்கம் : 991
 
  கேதிலா ளொருத்திக்கா வென்னைச் 1செய்தவித்
தீதெலாந் தேவிக்குத் தெரியச் செப்புவேன்.
 
     (இ - ள்.) மாதவன் - அவ்விதூடக வேதியன், மொழிதலும் - இவ்வாறு கூறியவுடனே,
மன்னன் - திவிட்டமன்னன், ஆங்கு ஒரு போதினால் புடைத்தனன் - அவ்விடத்தே ஒரு
மலர் மாலையாலே அவனை அடித்தனன், புடைத்தலோடும் - அடித்தவுடனே, இங்கு -
இவ்விடத்தே, ஏதிலாள் ஒருத்திக்கா - அயலாளாகிய ஒருத்தியின் பொருட்டு, என்னை -
பார்ப்பனனாகிய என்னை, செய்த இத்தீதெலாம் - அடித்த இத்தீச்செயலை முழுதும்,
தேவிக்குத் தெரிய - கோப்பெருந்தேவி உணரும்படி, செப்புவேன் - கூறுவேன் என்றான்,
(எ - று.)

     என்றான் என்பது சொல்லெச்சம்.

     அங்ஙனம் அசதியாடிய விதூடகன் உரையாற் சினந்தான் போன்று. நம்பி, ஒரு
பூமாலையாலே அவனை அடித்தானாக. வேதியன், அரசே நீ ஒரு பெண்ணின் பொருட்டுப்
பார்ப்பனனாகிய என்னை அடித்த இத்தீமையைத் தேவியறியக் கூறுவேன் காண் என்றான்
என்க.

 (463)

 

திவிட்டன் விதூடகனுக்கு முகமன் விளம்பல்

1595. என்றலு மெரிமணிக் கடகக் கையினால்
அன்றவன் கைத்தலம் 2பிடித்தங் கியாவது
3மின்றிற லினிச்செய்த லில்லே னச்சொலிச்
சென்றொரு மணிச்சிலா வட்ட மேறினான்.
 
     (இ - ள்.) என்றலும் - என்று அப்பார்ப்பனன் கூறியவுடன், எரிமணிக்கையினால் -
ஒளிருகின்ற மணிக்கலன் அணிந்த தன் கையாலே, அன்று அவன் கைத்தலம் பிடித்து -
அப்போது அவ்விதூடகனின் கையைப் பற்றிக்கொண்டு, யாவதும் - ஏதும், இன் திறல் -
இனிய திறல் உடைய பார்ப்பன மகனே, இனிச் செய்தல்இல் - இனி உன்னை யான் தீங்கு
செய்வேன் அல்லன், எனச் சொலி - என்று முகமன் கூறி, சென்று - அவணின்றும் போய்,
அங்கு ஒரு மணிச்சிலாவட்டம் ஏறினான், அவ்விடத்துளதாகிய மணியாலியன்ற ஒரு பளிக்கு
மேடையிலே ஏறுவானாயினன், (எ - று.)

     இன்றிறல் : அன்மொழித் தொகை.

     அவ்வாறு கூறிய வேதியனின் கைகளைப் பற்றிக்கொண்டு, நம்பி, நண்பனே! இனி
இத்தகைய தீமை யான் ஏதுஞ் செய்யேன்; வருதி! என்று அழைத்துக்கொண்டு ஒரு
மணிச்சிலாதலத்தே ஏறினான் என்க.

(464)

 

     (பாடம்) 1செய்தவத். 2 பிடித்தியாவது. 3 மின்றிறல் பின்னினிச் செய்தலில் லெனச்.