1024.

அந்துகி லசைத்த தோர்கை யவிழ்ந்தசை கின்ற தென்னும்
பைந்தளிர் மேனி தன்மேற் பன்மணிக் கலங்க 2டீண்டுஞ்
செந்தளிர் புரையு மேனிச் சேயிழை திறத்திற் காம
வெந்தழல் கனல மூட்டி வில்வலான் 3மெலிய லுற்றான்.
 

     (இ - ள்.) அசைத்தது அந்துகில் - கட்டப்பட்டதாகிய அழகிய சேலை, ஓர் கை
அவிழ்ந்து அசைகின்றது - ஒரு பக்கத்தே சிறிது நெகிழ்ந்து தளர்கின்றது, என்னும் -
என்பான், பைந்தளிர் மேனி தன்மேல் - பசிய தளிர்நிறம் அமைந்த திருமேனியின்கண்,
பன்மணிக் கலங்கள் தீண்டும் - பல்வேறு மணிகளானியன்ற அணிகலன்களைத்
தன்கையொற்றொடுவான், செந்தளிர் புரையும் மேனிச் சேயிழை திறத்தில் - செவ்விய
தளிர்போன்ற திருமேனியையுடைய சுயம்பிரபையின் பொருட்டு, காம வெந்தழல் கனலமூட்டி
- காமமாகிய வெவ்விய நெருப்பைக் கனன்று எரியுமாறு மூள்வித்துக்கொண்டு, வில்வலான் -
வில்வல்லனாகிய திவிட்டன், மெலியலுற்றான் - வருந்துவானாயினான், (எ - று,)

அவ்வோவியத்தில் துகில் ஒருசார் அவிழ்ந்தாற் போன்று வரைந் திருத்தலால் அவ்வாறு
கூறினன் என்க.

( 198 )