(இ - ள்.) வெய்யொளி நிறைந்த நீல விசும்பென்னும் - வெவ்விய ஒளியான் நிறைந்த நீலநிறமான விண் என்னும், மணிகொள் பொய்கை - அழகிய குளத்தின்கண்ணே, செய்யொளிச் செக்கர் என்னும் - சிவந்த ஒளியுடைய செக்கர் வானம் என்னும் செம்புனல் பரந்து தேறி - செவ்விய புதுப்புனல் பரவித் தெளிந்திட, மையிருள் என்னும் சேற்றில் - அப்பொய்கைக்கண் உள்ள கரிய இருள் ஆகிய சேற்றின்கண்ணே வளர்திங்கட்கதிர்கள் என்னும் - வளர்தலையுடைய திங்கள் மண்டிலத்தின் சுடர்களாகிய, மொய் இளம் கமல நாளம் வளையங்கள் முளைத்த அன்றே - செறிந்த இளமையுடைய தாமரையின் தாள்களையுடைய சுருள்கள் முளைப்பனவாயின அன்றே: அசை, (எ - று.) தாமரை வளையம் - தாமரை யிலைகளின் சுருண்ட தளிர்கள் - அவை வெண்ணிறமுடையன வாகலின் நிலாவொளிக் கற்றைக்கு உவமை கூறினார். |