இதுவுமது

1031.

அங்கொளி விசும்பிற் றோன்றி யந்திவா னகட்டுக் கொண்ட
     திங்களங் குழவி பால்வாய்த் தீங்கதிர் 1முறுவ னோக்கித்
தங்கொளி விரிந்த வாம்ப றாமரை குவிந்த வாங்கே
     2யெங்குள ருலகுக் கெல்லா மொருவா யினிய நீரார்.

     (இ - ள்.) அங்கு ஒளி விசும்பிற்றோன்றி அந்திவான் அகட்டுக்கொண்ட -
அவ்விடத்தே ஒளியுடைய விசும்பின் கண்ணே தோன்றிச் செக்கர் வானத்தின் இடையே
இருத்தலைக் கொண்டுள்ள, அங்குழவித் திங்கள் - அழகிய இளைதாகிய பிறையினது,
பாலவாய் தீம் கதிர்முறுவல நோக்கி - பால்போலும் நிலபுடைய வாயிற்றோன்றும் இனிய
வொளியாகிய புன்முறுவலைக் கண்டு, ஆம்பல் தங்கு ஒளிவிரிந்த - ஆம்பல்மலர்கள்
தம்மிடத்தே தங்கிய ஒளியை விரித்தன, தாமரை குவிந்த - தாமரை மலர்கள் கூம்பின,
ஒருவராய் உலகுக்கெல்லாம் இனிய நீரார் எங்குளர் - ஒருவராக இவ்வுலகம் முழுதிற்கும்
இனிமையே செய்யும் தன்மையுடையார் யாண்டுளர்? (இல்லை என்றபடி.)

ஒரு சாரார்க்கு இனிமை செய்யின் மற்றொரு சாரார்க்கு இன்னலாய் முடிதலின், உலகின்
அனைவருக்கும் இனிமையே செய்தல் யார்க்கும் இயல்வதன்று என்பதாம்.

( 205 )