இதுவுமது

1034.

கணிமிடற்ற நறவேங்க யவிர்சுணங்கின்
     மடவார்தங் கைமேற் கொண்டு
பணிமிடற்று மொழிபயிற்றும் பைங்கிளியின்
     செவ்வழியி னிசை மேற் பாட
மணிமிடற்ற செங்கண்ண பவழக்காற்
     கபோதங்கண் மதலை தோறு
மணிமிடற்றி னாலகவ வனங்கனையு
     1மனல்விக்கு மளிய மாலை.

     (இ - ள்.) கணி - காலங்கணித்தறிதற்கு ஏதுவாகிய, நறமிடற்ற வேங்கை - தேனை
மிடற்றின் உண்உடைய வேங்கை மலர்போன்ற, அவிர்சுணங்கின் மடவார் - பொன்னிறமான
திதலைபூத்துத் திகழும் மகளிர்கள் தம்கை மேற்கொண்டு - தம்முடைய கையின்கண்
ஏந்திக்கொண்டு, பணிமிடற்று மொழி பயிற்றும் - அணிகலன்களையுடைய தம் கண்டத்தால்
சொற்களைப் பயிற்றுவிக்கப்பட்ட, பைங்கிளி - பச்சைக்கிளிகள், இன் செவ்வழியின் - இனிய
செவ்வழி என்னும் பண்ணால், இசை மேற்பாட - இசைபாடுதலை மேற்கொள்ளவும்,
மணிமிடற்ற - நீலமணி போன்ற கழுத்தையுடையனவும், செங்கண்ண - சிவந்த கண்களை
யுடையனவும், பவழக்கால் - பவழம்போன்ற கால்களையுடையனவும் ஆகிய, கபோதங்கள் - புறாவும், மதலைதோறும் - புரைமாடங்கள்தோறும், அணிமிடற்றினால்
அகவ - அழகியமிடற்றொலியினாலே அகவவும், மாலை - மாலைக்காலம், அனங்கனையும் -
காமவேளையும், அனல்விக்கும் - வெதுப்பும், அளியம் - ஆதலால் யாம் அளிக்கற்பாலேம்,
( எ - று.)

காமநோய் செய்யும் காமவேளையும் இம்மாலை காமநோயால் அனல்விக்கும் என்க.
வேங்கை பூத்தலால் காலம் இன்னதென்று கணித்தல் மரபு. செவ்வழி - மாலைக்
காலத்திற்குரிய பண்.

( 208 )