1036 1036. | திண்ணியலைய மணிக்கதவந் தாழ்திறந்து திருவிளக்குத் திகழ மாட்டி விண்ணியல நறும்புகையுங் காழகிலும் விசும்பிவர்ந்து விம்ம மூட்டிக் கண்ணியுடன் வெறிமலரு நறும்பொடியுங் கமழ்சாந்துங் கையி னேந்திப் பண்ணியல நரம்பிசைமேற் பரமனையே பணிமொழியாள் பரவா நின்றாள். | (இ - ள்.) திண்ணிலைய மணிக்கதவம் - உறுதியாக நிற்றலையுடைய மணிகள் பதிக்கப்பட்ட கதவங்களின், தாழ் திறந்து - தாழக்கோலை அகற்றிக் கதவுகளைத் திறப்பித்து, திருவிளக்குத் திகழமாட்டி - திருவிளக்குகளை ஒளிரும்படி ஏற்றி, விண்ணியல் - விசும்பின்கண் பரவுதலையுடைய, அ நறும்புகையும் - அழகிய நறுமணங்கமழும் புகையுடனே, காழ் அகிலும் - உள்வயிருமுடைய அகிற்கட்டையால் ஆய புகையும், விசும்பு இவர்ந்து விம்ம - விண்ணிற்படர்ந்து செறியும்படி, மூட்டி - மூள்வித்து, கண்ணியுடன் - முடிமாலையுடனே, வெறிமலரும் மணமிக்க மலரும், நறும்பொடியும் - நல்ல மணப்பொடிகளும், கமழ்சாந்தும் - மணக்கும் சந்தனமும், கையின் ஏந்தி - ஆகிய இவையிற்றைக் கையகத்தே யேந்தியவளாய், பண்ணியல நரம்பு இசைமேல் - பண்ணின் இலக்கணம அமைந்த நரம்புகளையுடைய யாழினது இன்னிசையோடே, பணிமொழியாள் - பணிதலையுடைய மொழிகளை மேற்கொண்ட சுயம்பிரபை, பரமனையே பரவா நின்றாள் - அருகபரமனையே புகழ்ந்து பாடுவாளாயினாள், (எ - று,) பணிமொழியாள் கதவம் திறந்து, விளக்கம் மாட்டி, புகையும், அகிலும், விம்மமூட்டி, கண்ணியும், மலரும், சாந்தும், ஏந்தி, நரம்பிசையோடே, பரனைப் பரவாநின்றாள் ; என்க. | (210) | | |
|
|