1044.

திங்களங் கொழுநனைச் சேர்த்து தாரகை
யங்கொளி முகிழ்நகை யரும்பு மாதலான்
மங்கல மணமகன் 1மணந்த போதலா
லெங்குள திளையவர்க் கிளைமை யின்பமே.

     (இ - ள்.) திங்கள்அம் கொழுநனைச் சேர்ந்து - திங்களாகிய தம் அழகிய கணவனைக்
கூடியே, தாரகை - உடுக்கள், அங்கு ஒளி முகிழ் நகை அரும்பும் - அவ்விடத்தே
(தோன்றும் இன்பத்தால்) ஒளியுடைய முறுவல்பூக்கின்றன, ஆதலான் - அவ்வாறிருத்தலால்,
இளையவர்க்கு இளைமை மிக்க மகளிர்களுக்கு, மங்கலமணமகன் - நன்மை மிக்க காதலன்,
மணந்த போதலால் - உடனுறையும் காலத்தே உளதாவதன்றி, இளைமையின்பம் -
காதலின்பம்; எங்குளது - அவர் உடனுறைவிலாதபோது எவ்விடத்தும் உளதாகாது. ஏ :
அசை, (எ - று.)
விசும்பிடத்தே மீன்களும், தம் கணவனைக் கூடியே முறுவல் பூத்துத் திகழ்கின்றன;
காதலனைக் கூடிய விடத்தன்றி, மகளிர்க்கு இன்பம் வேறியாண்டுளது என்றாள், என்க.

( 218 )