பேய்களின் தன்மை

1060.

மதுக்கடை 2வழிபிழித் 3துவலை நாவளைத்
தொதுக்கமும் வெறியயர் களனு மூடுலாய்ச்
செதுக்கமும் பலிபெறு தெருவுந் தேர்ந்துபோய்க்
4கதுப்புகுந் துறங்குபு கழுதுஞ் சோர்ந்தவே.
 

     (இ - ள்.) மதுக்கடை வழி பிழித்துவலை நாவளைந்து - கள்விற்கும் கடைகளிலே
வழிந்து ஒழுகும் கள்ளினது துளிகளைத் தம் நெடிய நாவால் வளைத்துப் பற்றிச் சுவைத்து,
ஒதுக்கமும் - மக்கள் வழக்கற்ற ஒதுக்கிடங்களினும், வெறியயர்களனும் - வெறியாட்டயரும்
களங்களினும், ஊடுலாய் - ஊடே சென்று சுற்றி, செதுக்கமும் - நாற்சந்திகளிடத்தும்,
பலிபெறு தெருவும் - தெய்வங்கள் பலி கொள்ளும் தெருக்களிடத்தும், தேர்ந்துபோய் -
தமக்குரிய இரையினை ஆராய்ந்து சென்று, கதுப்புகுந்து - மலைமுழைஞ்சுகளிலே புகுந்து,
உறங்குபு - உறங்கி, கழுதும் - பேய்களும், சோர்ந்த ஏ - அறிவு சோர்தல் உடையவாயின,
ஏ : அசை, (எ - று.)

இஃது இடையாமத் தியல்பு கூறிற்று. இதன்கட் பேய்களின் செயல் அழகாகக் கூறப்பட்டமை
காண்க. செதுக்கம் - சதுக்கம் ; நாற்சந்தி. கது - குகை. ஒதுக்கம் - மக்கள் வழக்கற்றவிடம்.

( 234 )