1065.

கிளர்த்தன கிலுகிலுப் பரவப் புட்குலாம்
வளர்த்தன மகரயாழ் மருளி யின்னிசை
தளர்த்தன கருங்கடற் றரங்கந் தன்னமே
விளர்த்தது குணதிசை வேலை வட்டமே.

     (இ - ள்.) குலாம்புள் கிலு கிலுப்பு அரவம் - தம்முள் குலாவுதலையுடைய
பறவைகளின் கிலுகிலு என்னும் ஒசை, கிளர்த்தன - ஆரவாரித்தன, மகரயாழ் மருளி இன்
இசை - மகரயாழினது
மருட்கையூட்டும் இனிய இசை, வளர்த்தன - எழுப்பப்பட்டன, கருங்கடற்றரங்கம் -
கரியகடலின் அலைகள், தளர்த்தன - குறைந்தன, குணதிசை வேலைவட்டம் தன்னமே
விளர்த்தது - கீழ்த்திசைக் கண்ணதாகிய வளைகடல் சிறிது வெள்ளென விளர்த்தது, (எ -
று.)
தன்னம் - சிறிது. வைகறைப் போதில் காற்றியக்கம் குறைதலால் அலைகள் சிறிது
அடங்குதல் இயல்பு. தளர்த்தன - தளர்ந்தன : வலித்தல் விகாரம். பறவைகள் துயில்நீத்து
ஒலித்தன, பாணர்கள் யாழ் இசை எழீ இயினர், கடற்றரங்கம் தளர்ந்தன, குணதிசை
விளர்த்தது என்க.

( 239 )