விழா முரசு அறைதல்

1071.

குருமா மணிவேய் குடைமும் மையுடைப்
பெருமா னடிபே ணியபூ சனைநாள்
கருமால் களியா னைகண்மேற் கனபொன்
அருமா முரசார்ப் பவறைந் தனரே.
 

     (இ - ள்.) குருமாமணி வேய் குடை மும்மை உடைப் பெருமான் - நிறமமைந்த
மணிகளாலே அழகு செய்யப்பட்ட குடைகள் மூன்றனையுடைய அருகக்கடவுளின், அடி
பேணிய - திருவடிகளைப் போற்றுதற் பொருட்டு, பூசனைநாள் - விழா நாளை, கருமால்
களியானைகள்மேல் - கரிய நிறமுடைய பெரிய மதமயக்கம் கொண்ட அரசுவாக்களின்
எருத்தத்தே, அருமாமுரசு ஆர்ப்ப அறைந்தனரே - அரிய பெரிய முரசங்களை ஏற்றி
ஆரவாரிப்பச் செய்து அறிவிப்பராயினர், (எ - று.)
முக்குடை நிழற்றும், பெருமான் திருவிழா நாளை, யானையேறி முரசறைந்து, மாநகர்க்
கீந்தார் என்க.

( 245 )