1085.

தாமரைமு 1கத்தமனி யக்குடம வற்றாற்
சாமரைமு கத்தனம தக்களிறு தம்மேற்
பூமரைமு கத்தெறிபு னற்றிரைமு கந்து
தூமரைமு கத்தரசர் சென்றுபலர் சூழ்ந்தார்.

     (இ - ள்.) தூமரைமுகத்து அரசர் பலர்சென்று - தூய தாமரைபோலும்
மலர்ந்த முகங்களையுடைய மன்னர் பலர் சென்று, தாமரை முகத் தமனியக்குடம் அவற்றால்
- தாமரை மலர்போன்ற வாயையுடைய பொன்னாலியன்ற குடங்களால், மரைப்பூ முகத்து
எறிதிரைப் புனல் முகந்து - தாமரைப் பூக்களைத தம்பாலுடைய அலையெறியும்
கடவுட்புனலை முகந்து கொண்டு, சாமரை முகத்தன மதக்களிறு தம்மேல் - சாமரைகளால்
அணியப்பட்ட முகத்தையுடைய யானைகளின் மேற்கொண்டு சூழ்ந்தார் - வந்து
மொய்த்தனர், (எ - று.)
மன்னர் தமனியக் குடத்தால் கடவுட்புனல் முகந்துகொண்டு முகமகிழ்ச்சியுடனே, களிறுகள்
மேலேற்றிக் கொணர்ந்தவர் சூழ்ந்தார், என்க.

( 259 )