(இ - ள்.) அங்கண் அயிராவணம் இரண்டு உடன் எடுத்த - அழகிய கண்களையுடைய யானைகளிரண்டு ஒருசேர எடுத்த, மணிக்கலச மங்கலர நீர் சொரிய - மணிகள் பதிக்கப்பட்ட குடங்களின் நிறைந்த கடவுட்டன்மை யுடைய நீரைப் பொழியாநிற்ப, ஆடி - மங்கல நீராடுதலைச் செய்து, இருபுயல் - இரண்டு முகில்கள், பொங்கு திரை ஒன்று - மிக்க அலைகளையுடைய கடலின்கட் சேர்ந்து, தங்குபுனல் பொலிய ஏந்தி - அங்குத் தங்குதலையுடைய நீரை அழகுறச் சுமந்து கொணர்ந்து, பெய்த தடமால்வரை ஒத்தான் - பொழியப்பட்ட பெரிய மலையை ஒத்துத் தோன்றினான், (எ - று,) அயிராவணம் - ஒரு கடவுளியானை - அக்கடவுளியானையை ஒத்த யானைகள் என்றபடி, அயிராவணம் அனைய, இரண்டு யானைகள் ஒருசேர மணிக்கலச நீரைச் சொரிய ஆடிய நம்பி, இரண்டு மேகங்கள், கடல் முகந்து தன் உச்சியில் ஒருசேரச் சொரியப் பெற்ற, பெரிய மலையை ஒத்தான் என்க. |