(இ - ள்.) நான்முகன் வலத்து - நல்லிடத்து - பிரமனுக்குரித்தாகிய வலப்பக்கத்தினதாகிய சிறந்த இடத்தினும், ஒரு காவல் - ஒரு காப்பு மறைமொழி ஓதியிட்டு, மேல்முகமிருந்து குணபால் வெறுவிது ஆக - மேற்றிசையினின்றும் கீழ்த்திசைகாறும் வறிதே கிடக்கவிட்டுப் பின்னர், பால்முறை பயின்ற பருதிக்கடிகை - கூறு கூறாகப் பகுத்துப் பயின்றனவாகிய மறைமொழியை ஓதி வேள்வித்தீயை இட்டு, தான் - அவ் வேள்வியாசான், முறையின் ஓது - முறைப்படி மந்திர மோதுதற்குரிய, சமிதைத் தொழுதி சார்ந்தான் - வேள்வி விறகுத் தொகுதிகிடந்த இடத்தைஎய்தினன், (எ - று.) நான்முகனுக்குரிய வலத்ததாகிய நல்லிடம் என்க. காவல் - காப்பு மந்திரம் (ஓதி என்க) பயின்ற: பெயர். பருதிக்கடிகை. வேள்வித் தீ. சமிதை - வேள்விவிறகு. தொழுதி - தொகுதி. |