(இ - ள்,) அழல் வேள்வியில் மன்னி அவற்கு வலமாக - தீயையுடைய மணவேள்விக்கண் நிலைபெற்றுத் திவிட்டநம்பிக்கு வலப்பாகத்தே, பின்னிய தருப்பைகள் பிடித்து அவை விடுத்து - பிணைக்கப்பட்ட தருப்பை பிடித்துச் செய்வதாய தொழில்களைச் செய்து பின்னர் அத்தொழிலையும் விட்டு, ஆங்கு அன்னம் அனையாளொடு - அவ்விடத்தே அன்னம்போன்ற சுயம்பிரபையுடனே, அயல் வேலவன் இருந்தான் - அயிலாகிய வேற்படையையுடைய திவிட்டநம்பி வீற்றிருக் கின்றவன், கன்னியொடு இயைந்த கதிர் மாமதியம் ஒத்தான் - சித்திரை நாளொடு வீற்றிருந்த ஒளியுடைய முழுத்திங்களை ஒத்திருந்தான், (எ - று.) வலமாகப் பின்னிய தருப்பை எனினுமாம். கன்னியோடியைந்த கதிர்மதி என்றது சித்திரைப் பருவத்திங்களை. அழல் வேள்விச் செயல் முற்றி நங்கை யோடிருந்த நம்பி, சித்திரை நாளொடு இருந்த திங்களை ஒத்தான், என்க. அத்திங்கள் மிகுந்த ஒளியுடைத்தாயிருக்கும் என்ப. இதனை “காப்யபிக்யா தயோராஸீத் வ்ரஜதோ: சுத்த வேஷயோ: ஹிம நிர்முக்தயோர் யோகே சித்ராசந்த்ரம ஸோரிவÓ எனவரும் ரகுவம்சத்தாலும் உணர்க. (1-46) |