(இ - ள்.) கந்துள் உமிழும் கரிய சூழ்புகைகள் விம்ம - கரியை உமிழ்கின்ற கரியவாய்ச் சூழ்தலையுடைய வேள்விப் புகைகள் பெருகவும், சுடர் வந்து ஏந்தி வலனே சுழல மாட்டி - வேள்வித்தீ மிக்கு ஓங்கி வலப்புறத்தே திரிந்து சுழலுமாறும் கொளுவி, அந்தணனும் - வேள்வியாசானும், அங்கு அழல் அமைத்து வேட்டான் - அவ்விடத்தே தீயோம்பி வேள்வி செய்தான், மைந்தனும் - திவிட்டநம்பியும், மடந்தையை - சுயம்பிரபையை, தன் மனத்தின் - தன் மனத்தினுள்ளே, மிக வேட்டான் - மிக விழைவானாயினன், (எ - று.) கந்துள் - கரிக்கட்டி. அந்தணனும் அங்கு அழல் அமைத்து வேட்டான், மைந்தனும் தன் மனத்துள்ளே காதலமைத்து வேட்டான் என்க. |