அருந்ததி காட்டல்

1104.

வானநெறி யெங்கும்வளர் சோதி 1வட மீனைக்
கானமயி லன்னவடன் முன்னைநனி காட்ட
யானுமிவன் போலுலகு காணவியல் வேனோ
ஈனமொடு நாணமில னோவெனவி கழ்ந்தாள்.

     (இ - ள்.) வானநெறி எங்கும் வளர் சோதி வடமீனை - விசும்பிற் றான் இயங்கும்
வழியெங்கும் பரவும் ஒளியையுடைய அருந்ததியை, கானமயில் அன்னவள் தன் முன்னை
நனிகாட்ட - காட்டகத்தே வாழுமியல்பிற்றாய மயில்போலும் சாயலையுடைய சுயம்பிரபைக்கு
முன்னரே சுட்டி நன்கு காட்டாநிற்ப, யானும் இவள்போல் உலகு காண இயல்வேனோ -
யானும் இவ்வருந்ததி போன்று உலகில் வாழும் ஏதிலாரெல்லாம் பார்க்குமாறு திரிவேனோ?
அவ்வாறு திரிதற்கு, ஈனமொடு - கீழ்மைக் குணமுடைமையும், நாணமிலனோ என - நாணம்
இல்லாமையும் உடையேன் கொல் என்று, இகழ்ந்தாள் - அவ்வருந்ததியை இகழ்வாள்
ஆயினாள், (எ - று.)

     அருந்ததி பலரும் காணத்திரிதலால் ஈனமுடைமையும் நாணமின்மையும் உடையாள்
என்றிகழ்ந்தாள் என்க. உலகிலுள்ள ஏனைய மகளிர்க்கு நீயில் இவ்வருந்ததிபோல வாழ்மின்
என்று காட்டப்படும் அருந்ததியை அருந்ததியினும் சிறந்த இவட்கு நூன்முறைப்படி
காட்னராகலின் அவள் அவள்பாற் குறை கண்டு கூறினள் என்பதாம்.

     ( 280 )