1105.

அங்கமிரு மூன்றுமறை 3நான்கலகில் கற்ப
மிங்குமுடி விஞ்சையென 4வின்னகரை கண்ட
பொங்கெரிய வேள்விவல்பு ரோகிதன வற்குச்
சங்கநிதி யென்னநெதி மாரிதரு வித்தார்.

     (இ - ள்.) அங்கம் இருமூன்றும் மறைநான்கு அலகில் கற்பம் - ஆறு உறுப்புக்களும்
நான்கு மறைகளும் எண்ணிறந்த மந்திர நூல்களுமாய், விஞ்சை என இங்குமுடி இன்ன கரை
கண்ட வித்தைகள் என்று இவ்வுலகத்தே அறிஞர்களால் முடிபு கூறப்பட்ட இவையிற்றைக்
கற்றுத் துறைபோயவனும், பொங்கு எரிய வேள்விவல் - மிக்கெரிகின்ற தீயையுடைய
வேள்விகளை வேட்பதில் வல்லுநனும் ஆகிய, புரோகிதன் அவற்கு - ஆசான் ஆகிய
அவ்வந்தணனுக்கு, சங்கநிதி என்ன - விரும்பியவற்றைச் சுரந்தளிக்கும்
கடவுட்டன்மையுடைய சங்கநிதியைப் போன்று, நெதிமாரி தருவித்தார் - பொருள் மழையை
வரவழைத்தார், (எ - று.)
கற்பம் - மந்திரநூல். ஆறங்கமும், நான்குமறைகளும், எண்ணிறந்த கற்பங்களுமாகிய
வித்தையெல்லாம் கரைகண்ட, அவ்வாசாற்குச் சங்கநிதி பொழியுமாப் போலே நிதி
பொழிந்தார், என்க.

( 279 )