இதுவுமது

1118.

காவி யாகின்ற கருமா மழைக்கண்ணி
மேவியா னுண்ணு 3மமிர்தாய் விருந்தாகி
ஆவியா கின்றா ளருமருந்து மாகின்றாள்
பாவியேன் பாவைக்கோ ராளேயா கின்றேனே.

     (இ - ள்.) காவி ஆகின்ற - குவளைமலர் போன்ற, கரு மா மழைக் கண்ணி - கரிய
பெரிய மழைபோன்ற கண்ணையுடைய இச் சுயம்பிரபையோ வெனில், மேவி யான் உண்ணும்
- பொருந்தி யான் நுகர்கின்ற, அமிர்தாய் - அமிழ்தமாய், விருந்து ஆகி - மேலும் மேலும்
புதுமையுடைய பொருளாய், ஆவியாய் - என் ஆருயிரேயும் ஆய், அருமருந்தும்
ஆகின்றாள் - பெறற்கரிய மருந்தும் ஆவாளாகவும், பாவியேன் - பாவமுடைய யானோ,பாவைக்கு - பாவைபோன்ற இவள் திறத்து, ஓர் ஆளே ஆகின்றேன் - ஒரு கணவன் என்னும் மாத்திரையே ஆகின்றேன், ( )

நங்கை எனக்கு அமிர்தம் முதலிய எல்லாம் ஆக யானோ ஒரு கணவனே ஆகின்றேன்
என்றான் என்க. இஃது ஊடலுணர்த்தக் கூறியது என்க. அவளை இன்றியமைந்து
வாழமாட்டாத யானும், அவட்கு அமிர்த முதலியன போல்வே னாயின் அவள் என்னோடு
பேசுவாள் அன்றோ என்றவாறு.

( 292 )