(இ - ள்.) நறுங்குரவே - நறிய குராமரமே !, வையம் வணங்கித் தொழநின்ற மன்னன் காதல் மடமகள் போல் - உலகெலாம் வணங்கித் தொழும்படி சிறப்புற்று நின்ற சடிமன்னனுடைய அன்புக்குரிய மடமிக்க மகளாகிய சுயம்பிரபையை ஒப்பாகக்கொண்டு, மணங்கள் நாறும் பூம்பாவை வளரல் - மணங்கள் கமழும் அழகிய பாவையை ஈனாதேகொள், மணங்கள் கமழும் அழகிய பாவையை ஈனுவையாயின், நறுங்குரவே - நறியகுராமரமே நீ, இளையாரால் கணங்களோடு பறிப்புண்டி கண்டாய் - இளமகளிர்களாலே கூட்டத்தோடே வந்து பறிக்கப்படுவாய் காண்; கண்டாய், வாழி: முன்னிலை யசைகள், (எ - று.) குரவம்பூவை, பாவை என்பது மரபு, இளமகளிர்கள் குராமலரைப் பறித்து மகவெனவைத்து ஆட்டயர்தல் மரபு. |