நங்கை புன்முறுவல் பூத்தல்

1129.

இன்னண மிளையவர் பாடக் கேட்டலு
மன்னவன் மடமகண் முகத்து வாணிலா
மின்னியோ ரணிநகை 1முகிழ்த்து மீள்வது
கன்னவி றோளவன் கண்கொண் டிட்டவே.

     (இ - ள்.) இன்னணம் இளையவர் பாடக் கேட்டலும் - இவ்வாறு அவ்விள மகளிர்கள்
இசைபாடுதலைக் கேட்டவுடனே மன்னவன் மடமகள் முகத்து வாள் நிலா மின்னி -
சடிமன்னனின் இளமகளாகிய சுயம்பிரரையின் முகத்தே ஒளி நிலாத் தவழ்ந்து, ஓர் அணி
நகை முகிழ்த்து மீள்வது - ஓர் அழகிய முறுவல் பூத்து மறைந்ததனை, கல்நவில்தோளவன்
கண் கொண்டிட்டவே - கல்லைஒத்த தோளையுடைய திவிட்டநம்பியின் கண்கள் கண்டன,
ஏ: அசை, (எ - று.)

இவ்வாறு மகளிர் பாடக் கேட்டவுடன், நங்கை முகத்து ஓர் அணி நகை முகிழ்த்து மீள,
அதன் நம்பி கண்டனன், என்க.

( 303 )