(இ - ள்.) நம்பி - திவிட்டன்; நல்தவம் உடையனே - நல்ல தவத்தை யுடையவனே யாவன்; என்று - என்று கூறி; பூண் வில் தவழ் - அணிகலன்களின் ஒளிதவழ்தலோடு; சுடர் ஒளி விளங்கும்மேனி - இயற்கையொளி விளங்குகிற உடலையுடைய; அக்கொற்றவன் குறிப்பினை - அப் பயாபதி மன்னன் குறிப்பினை; அறிந்துகூறிய - நூன்முறைப்படி அறிந்து கூறுதற்கு; மந்திரத்து உளார் அவர் தொடங்கினார் - ஆராய்ச்சி மன்றத்திலிருந்த அமைச்சர்கள் தொடங்கினார்கள். (எ - று.) அமைச்சர் திவிட்டனுடைய குணங்குறிகளைப்பற்றிப் பயாபதி மன்னனிடம் சொல்லத் தொடங்கினார்கள். தவம் - செல்வத்திற்குக் காரணமானது. “இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலாதவர்“ என்னுந் திருக்குறளுங் காண்க. நோற்றல் - தவஞ் செய்தல். கூறிய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். மந்திரத்துளார் கொற்றவன் குறிப்பறிந்து திவிட்டன் நீர்மையான், அலரும் என்பது பண்டுங் கேட்டும், உடையன் என்று மேலுங் கூறத் தொடங்கினார் என்க. |