பளிங்குமேடை யமைத்துக் காவல்வைப்போம் என்றல்

116.

நாமினி மற்றவன் மொழிந்த நாளினால்
தேமரு சிலாதலந் திருத்தித் தெய்வமாம்
1தூமரு மாலையாய் துரும காந்தனைக்
காமரு பொழிலிடைக் காவல் வைத்துமே.
 

     (இ - ள்.) தெய்வமாம் - தெய்வத்தன்மை பொருந்திய; தூமரு மாலையாய் -
தூயமணம் வீசும் மாலையை அணிந்தவனே; நாம் இனி - நாம் இனிமேல்; அவன்மொழிந்த
நாளினால் - அந்நிமித்திகன் கூறிய நாளில், தே மரு சிலா தலம் - இனிமை பொருந்திய
பளிங்கு மேடையை; திருத்தி - திருத்தமாக அமைத்து; துருமகாந்தனை - துருமகாந்தன்
என்பவனை; காமரு பொழிலிடை - விருப்பத்தை யுண்டுபண்ணுகிற பொழிலினிடத்தே;
காவல்வைத்தும் - விஞ்சையர் தூதனது வரவையறிதற் பொருட்டுக் காவலாக வைப்போம்.
ஏ - ஈற்றசை. மற்று - அசை. (எ - று.)

     அனைவோர்க்குந் தெய்வம் இலைமுகப் பைம்பூணிறையாதலால், பயாபதி மன்னன்,
“தெய்வமாம் தூமரு மாலையாய்“ என்று விளிக்கப் பெற்றான். தெய்வம் ஆம் தூமருஎன
எடுத்து - தெய்வத் தன்மையுள்ள நறுமணம் என்றுங் கொள்ளலாம். துருமகாந்தன் என்னும்
வட சொல்லுக்குப் பொருள் மரங்களிடத்தில் விருப்பமுடையவன் என்பதாம். வைத்தும்
உளப்பாட்டுத் தன்மைப் பன்மை.
 

( 47 )