(இ - ள்.) போது உலாம் அலங்கல் மார்ப - மலர்கள் பொருந்திய மாலையையுடைய வேந்தே!, ஆதலால் - அவ்வாறாதலால், ஆயில் - ஆராயுமிடத்தே, எங்களால் ஆவது - எம்மனோரால் ஆகற்பாலது, ஒன்று இல்லை - பிறிதொன்றுமில்லை, பொருவது பொருந்திற்று - போர்செய்தலே இப்பொழுது தக்கதாயிற்று, என்னும் - என்று கூறிய, காதலான் கனகசித்திரன் - மகனாகிய கனகசித்திரன் என்பானுடைய, கட்டுரையதனைக் கேட்டே - பொருன் பொருந்திய மொழிகளைக் கேட்டு, கோது இலா மாரி பெய்த - குற்றமில்லாத மழைபொழியப்பட்ட, கோடை அம்குன்றம் ஒத்தான் - கோடைக்காலத்து மலையை ஒத்தவன் ஆனான், (எ - று.) ஞாயிற்றின் வெப்பத்தாலே கொதித்து நின்ற குன்றம், பெரிய மழை பெய்தலாலே குளிர்ந்தாற் போன்று, திவிட்டன் பகையாலே கொதித்த அச்சுவ கண்டன், கனகசித்திரன் சொன்மாரியாலே சினந்தணிந்து மனங்குளிர்ந்தான்; என்பதாம். |