1172. மகரமால் கடலை யல்லாற் சிறுகய மதலை சேரா
சிகரமால் யானை வேந்தே தானவர் செருவன் றாயி
1னிகரலா நீசர் தம்மேல் நீலெசற் 2பாற்றன் றென்று
புகரெரி யவிக்க லுற்றான் பொழிமழை பொழிவ தொத்தான்.
     (இ - ள்.) மகரமால் கடலை யல்லால் - மகர மீன்கள் வாழும் பெரிய கடலின்கட்
சேர்வதல்லது, மதலை-மரக்கலங்கள், சிறு கயம் சேரா - சிறிய குளத்தைச் சேரமாட்டா,
சிகரமால் யானை வேந்தே - மத்தமுடி அணிந்த அரசுவாக்களையுடைய மன்னனே,
தானவர் செரு அன்றாயின் - அசுரர்கள்பால் போர் செய்வதாயின் செல்வதல்லது, நிகரிலா
நீசர் தம்மேல் - நினக்கு ஒரு சிறிதும் ஒப்பற்ற கீழோராகிய மனிதரிடத்தே, நீ செலற்பாற்று
அன்று - நீ போர் செய்யச் செல்லும் பான்மையை அல்லை, என்று புகர் எரி
அவிக்கலுற்றான் - என்று கூறிப் பெரிய சினநெருப்பை அவிக்கின்றவனாகிய வச்சிர
கண்டன், பொழிமழை பொழிவதொத்தான் - மிக்குப் பொழிகின்ற மழையை
ஒத்தவனானான், (எ - று.)

கடலிடத்தே செல்வதல்லது மரகலம், சிறிய குளத்திலே சேருமோ, வேந்தே நினக்குச்
சிறிதும் நிகரிலாப் பொள்ளல் யாக்கை மானுடரைப் பொருதற்கு, நீ போதல் தகுதியன்று,
என்று அச்சுவ கண்டனுடைய உள்ளம் குளிர உரைத்தான், என்க.

( 42 )