புகைக் கொடியோன் புகலல்

1176. அணிநகர் மேக கூட மதனையாண் டரிய செய்கை
துணிபவன் றூம கேது 3சூழ்ந்தனன் சொல்ல லுற்றான்
மணிவரைப் பிறந்து மாண்ட வருங்கல மன்னர் கோமான்
பணிவரை யன்றி யாரே பெறுபவர் பகர்மி னென்றான்.
     (இ - ள்.) மேககூட அணிநகர் - அதனையாண்டு அரிய செய்கை துணிபவன் -
மேககூடம் என்னும் அழகிய நகரத்தை ஆள்பவனும், ஆராய்ந்து காண்டற்கரிய
செயல்களைத் தன் மதி நுட்பத்தால் ஆராய்ந்து தெளியவல்லவனும் ஆகிய, தூமகேது -
தூமகேது என்பவன், சூழ்ந்தனன் - ஆராய்ந்து, சொல்லலுற்றான் - சொல்லத்
தொடங்கினான், மணிவரைப் பிறந்து மாண்ட அருங்கலம் - அழகிய மலையிடத்தே
தோன்றி மாட்சிமைப்பட்ட பெறற்கரிய அருங்கலம் ஒன்றனை, மன்னர் கோமான் பணிவரை
அன்றி - நம் அரசர் பெருமானாகிய அச்சுவகண்டனுடைய அணிகலனுடைய மலைபோன்ற
மார்புபெறுவதல்லது, யாரே பெறுபவர் பகர்மின் என்றான் - பிறர் யாவரே
அடைதற்குரியார் ஆவார், ஆராய்ந்து கூறுங்கள் என்றான், (எ - று.)

பணிவரை - அணிகலன்களையுடைய மலைபோன்ற மார்பு. தூமகேது அரிமஞ்சு
வினாவைப் பின்பற்றிக் கூறுகின்றவன், வரையுலகத்தே பிறந்து மாண்புடைத்தாகிய
அருங்கலம் ஒன்று அவ் வரையாளும் மன்னன் மார்பிற்கன்றி வேறு யார்க்குரித்தாம்
கூறுங்கோள் என்றான் என்க. “அருங்கலம்Ó என்றது சுயம்பிரபையை.

( 46 )