1192. இமையவ ரரசன் றானு மிகல்செயக் கருதி வந்தா
லமையுமஃ தஞ்ச 1லாமே யாண்கட னதுவ தானா
னவையின ருளரென் றஞ்சி நடுங்கினர் தமக்கு நாளுஞ்
2சுவைபெறு தோளும் வாளுஞ் சொல்லுமின் சுருங்க வென்பார்.
 

     (இ - ள)் இமையவர் அரசன்றானும் - இவ்வச்சுவகண்டன் கிடக்க, அமரர்கள்
வேந்தனாகிய இந்திரனே ஆயினும், இகல்செயக் கருதி வந்தால் - நம்பால் போராற்றுதலை
எண்ணி வருவானாயின், அமையும் - நமக்குப் பொருந்துவதேயாம், அஃதஞ்சலாமே -
அதற்கு யாம் அஞ்சுதல்தகுமோ, ஆண்கடன் அதுவது ஆனால் - ஆண்மையுடையோர்
கடமை அவ் வஞ்சாமையே ஆயின், நவையினர் உளர் என்று அஞ்சி - தீமை செய்யும்
பகைவர் உளரே என்று நினைக்கும்போதே அச்சமடைந்து, நடுங்கினர் தமக்கு - நடுங்கும்
இயல்புடையோர்க்கு, தோளும் வாளும் சுமைபெறும் - அவருடைய தோளும் அவர் ஏந்திய
வாளும் அவர் வருந்துதற்குக் காரணமான சுமையே ஆகப் பெறும், சொல்லுமின் சுருங்க
என்பார் - நும்முடைய எண்ணங்களையும் எமக்குச் சுருக்கமாகக் கூறுங்கள் என்பார்,
(எ - று.)

ஆண் கடன் அது - அதுவது என்புழி, அது, பகுதிப் பொருளது. அதுவானால் - அவ்
வஞ்சாமையே ஆயின். இந்திரனே நம்மை எதிர்ப் பினும் வீரவாழ்க்கை மேற்கொண்ட யாம்
அஞ்சுவதும் உண்டோ, அத்தகைய வீரமற்றோர் கொண்ட வில்லும் வாளும் தோளும்
அவர்க்குச் சுமையேயாம் நுங்கருத்தையும் கூறுமின் என்றார் என்க.

“கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும்
ஆற்ற லதுவே படைÓ
என்னும் திருக்குறட் கருத்தையுடையது இச் செய்யுள். விரைந்து போர்க்கு எழுதல்
வேண்டுமாகலின் சுருங்கச் சொல்லுமின் என்றார்.
 

( 62 )