(இ - ள்.) மானமர் நெடுங்கணார் தம் மனம் என வெஃகி - மான்கண்போன்ற நெடிய கண்களையுடைய இளமகளிர்களுடைய நெஞ்சம் தம் காதலரின் அகலத்தை விரும்புமாறு போலே, மைந்தர் ஊனமில் அகலம் மூழ்கி - மறவர்களினுடைய குற்றமற்ற மார்பினை விரும்பி அதன்கண்புக்கு முழுகி, உள்ளுற - உடலுள்ளே பொருந்துதலாலே, சிவந்த ஒள்வாள் -சிவப்புடையதாகிய ஒளியுடைய நம்முடைய வாட்படைகள், ஈனமா - தமக்கு இளிவரவுண்டாக, மருங்கின் ஆராது - நம் இடையில் கட்டுண்டு கிடந்து பசித்து, இரைக்கு இடைந்து - தம் இரையை வேட்டு வருந்தி, அனல்ப - கொதிக்கின்றன, இன்று - இன்றைக்கு, தானவர் குருதி மாந்தி - அவ்வச்சுவகண்டனே முதலிய விச்சாதரருடைய குருதியைப் பருகி, தம் பசி தணியும் என்பார் - தம் பசி தீரப்பெறும் என்று கூறுவார், (எ -று.)ஆராது - உண்ணாது, காதலர் மார்பிலே விருப்பத்தோடே பாய்ந்து மூழ்கும் மகளிர் கண்போல் பகைவர் மார்பிடத்தே மூழ்கும் நம் மறவாள், நம் மருங்கிற் கட்டுண்டு ஊண் பெறாது பசித்துக் கனல்ப, இன்று விஞ்சையர் குருதியை நன்கு பருகிப் பசிதணியும் என்றார் என்க. |