1195. | ஆதலா லதனு ணாமு மயிற்படைப் புணைகள் பற்றி 3யேதிலா மன்ன ரென்னு மிருமரக் கடப்பு வாரி மீதுலாம் வெகுளி யென்னும் வெவ்வழன் முழங்க மாட்டிக் காதலார் 4கண்கள் பூப்பக் காய்த்துதுங் 4கைகோளென்பார். | (இ - ள்.) ஆதலால் அவ்வாறாதலின், நாமும் - யாம் அனைவரும், அதனுள் - அவ்வெள்ளத்தூடே, அயிற்படைப்புணைகள் பற்றி - வேல்என்னும் தெப்பங்களைப் பற்றுக்கோடாகக்கொண்டு, ஏதிலாமன்னர் என்னும் - பகையரசர்கள் என்னும், இருமரக்கடப்பு வாரி - பெரிய மரங்களாகிய தடையைப் பறித்தொழித்து, அம்மரங்களைக்கொணர்ந்து, மீதுலாம் வெகுளி என்னும் - மிகைப்பட்டு ஓங்குகின்ற சினம் என்று கூறப்படுகின்ற, வெவ்வழல் - வெவ்விய நெருப்பை, முழங்கமாட்டி - ஒலிக்குமாறு கொளுவி, காதலார் கண்கள் பூப்ப - நம்பால் அன்புடையார் கண்கள் மலரும்படி, காய்த்துதும் - அத்தீயில் நம்முடல்களைக் காய்த்துவோம், கைகோள் என்பார் - இது நாம் செய்தற்குரிய செயலாம் என்பர், (எ - று.) கைகோள் - செயல். | ( 65 ) | | |
|
|