(இ - ள்.) கண்கனல் உமிழ்ந்து தம் புலமுங் காணல - கண்கள் நெருப்பைக் காலுதலால் தமது காட்சிப் புலனாகிய ஒளியைக் காணமாட்டாவாயின, வீரன் வெண்கதிர் மணிமுத்தம் விதிர்க்கும் மேனியன் - மறத்தன்மை மிக்க திவிட்டன் வெண்சுடர்வீசும் முத்தமணிகளைப் போன்ற வியர்வை நீர்த்துளிகளை உதிர்க்கும் உடலையுடையனாய், புண்களுள் எஃகு எறிந்தனைய புன்சொலால் - பழைய புண்களிலே வேற்படையை எறிந்தாற் போன்று இன்னல் தருகின்ற தூதர் உரைத்த இன்னாச்சொல் காரணமாக, விண்களை வெதுப்பினன் என்ப ஏ - விசும்பு முழுதும் வெப்பமுறச் செய்தான், என்று கூறுவர், (எ - று)விண்களை என்புழி கள் அசை எனலுமாம். கண்கள் தீக்காலுதலாலே, தம்புலன்களைக் காணமாட்டா வாயின; முத்தம் போன்று உடலில் வியர்வை துளித்தது; தூதர் உரைத்த புன்சொல் காரணமாக நம்பி விண்ணைத் தன் சினத்தீயால் வெதுப்பினன், என்க. |