1214. | கலைமிசை யினியசொற் கன்னி காளைதன் னிலைமிசை யலங்கன்மார் பிசையக் கேட்டுமோர் மலைமிசை மறைத்துவா யுரைக்கும் வல்லதிற் 1சிலைமிசைத் தோளினான் சேவ கங்களே. | (இ - ள்.) கலைமிசை இனிய சொல்கன்னி - கலையின்பத்தினும் காட்டில் உயரிய இனிமையுடைய சொற்களையுடைய சுயம்பிரபை நல்லாள், காளைதன் நிலைமிசை அலங்கல் மார்பு இசையக் கேட்டும் - திவிட்டனுடைய உறுதியுடையதும் மேலே மலர்மாலை அணியப்பட்டதுமாகிய மார்பினிடத்தே பொருந்திய செய்தியைக் கேள்வியுற்றிருந்தேயும், ஓர் மலைமிசை மறைந்து - தான் தன் ஒப்பற்ற மலையிடத்தே ஒளிந்திருந்து, வாய் உரைக்கும் - வெறும் வாயான் மட்டும் மறங்கூறும், மிசைசிலைத் தோளினான் - வில்மேலே கிடக்கப்பெற்ற தோள்களையுடைய அச்சுவகண்டனுடைய, சேவகங்கள் வல்லதுஇல் - ஆண்மையிற் சிறந்த ஆண்மை பிறிதில்லை, (எ - று.) சிலைமிசைத் தோளினான் - கல்லினும் உயர்ந்த தோளான் எனினுமாம். அச்சுவகண்டன் மலையில் மறைந்திருந்து கூறும் வறுஞ்சொல், அவன் ஆண்மையற்றவன் என்பதை விளக்கும் என்றார், என்க. | ( 84 ) | | |
|
|