தெய்வ மொழி உண்டாதல் | 1216. | என்றவர் மொழிதலு மெழுந்து தூதுவர் சென்றன ராயிடைத் தெய்வ வாய்மொழி 1வென்றுவீற் றிருக்குமிவ் விடலை யேயென நின்றது நிலமகள் பரிவு நீங்கினாள். | (இ - ள்.) என்று அவர் மொழிதலும் - என்று அம்மன்னர்கள் உரைத்தவுடனே, தூதுவர் எழுந்து சென்றனர் - அவையிற்றைக் கேட்ட விச்சாதரதூதர் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லா நின்றனர், ஆயிடை - அந்தச் செவ்வியில், தெய்வ வாய்மொழி - தெய்வமாகிய அசரீரியின் மெய்ம்மொழி, “இவ்விடலையே வென்று வீற்றிருக்கும்“ என நின்றது - “இத்திவிட்டநம்பியே அச்சுவக்கிரீவனை வென்று நிலைத்திருப்பான் என்று எழா நின்றது, நிலமகள் பரிவு நீங்கினாள் - நிலம் என்னும் நல்லாள் அல்லல் தீர்ந்த நெஞ்சினள் ஆயினள், (எ - று.) என்று தூதர்க்குத் தகுந்த மாற்றங் கூறியவுடன் அவர் இறையருளால் உய்ந்தோமென எழுந்து போயினர்; அவ்வமயம், அசரீரி நம்பிக்கு வென்றி வீற்றிருக்கும் என்றது: நிலமகள் பரிவு தீர்ந்தாள் என்க. | ( 86 ) | | |
|
|