(இ - ள்.) இவன் பாடி வட்டம் - இத்திவிட்ட நம்பியின் இருக்கையிடமெங்கும், வரிவளை முரன்றன - வரிகள் பொருந்திய சங்குகள் முழங்கின, வானதுந்துபி திரிவன அறைந்தன - தேவதுந்துபிகள் எங்கும் சென்று சென்று முழங்கின, பரிவு இறையின்றி - ஒரு சிறிதும் இரக்கமில்லாமல், வீரர்தம் செங்கண் தீப்பட - மறவர்களுடைய கண்களிலே தீயுண்டாக, புருவ மூரியில் முரிவன - புருவங்களாகிய பெரிய விற்கள் வளைந்தன, (எ -று.)அப்பொழுது சுரமை நாட்டில் நன்னிமித்தங்கள் தோன்றின; அவை வருமாறு :- சங்குகள் தாமே ஒலித்தன, வான துந்துபி முழங்கின, மறவர்கண்கள் தீச்சிந்தின, புருவங்கள் வளைந்தன, என்க. |