இதுவுமது | 1218. | ஆளியே றனையவ னணிபொன் மேனிமே னீளொளி தவழ்ந்தது நெடுங்க ணேழையர் தோளுமங் கிடவயிற் றுடித்த வீரர்கை வாளும்பூ நின்றன மலர்ந்த 1துள்ளமே. | (இ - ள்.) ஆளியேறு அனையவன் - ஆண் அரிமாவை ஒத்த திவிட்ட நம்பியினுடைய, அணிபொன் மேனிமேல் - அணிகலன்களையுடைய அழகிய திருமேனி மேலும், நீள்ஒளி தவழ்ந்தது - நீளிய ஒளி தவழ்ந்தது, ஏழையர் - மகளிர்களுடைய நெடுங்கண் தோளும் - நீண்ட கண்களும் தோள்களும், அங்கு இடவயின் துடித்த - அப்போது இடந்துடித்தன, வீரர் கைவாளும் பூநின்றன - மறவர்களுடைய கையிற்பிடித்த வாட்படைகளும் தாமே கூர்மையால் பொலிவுடைத்தாய் விளங்காநின்றன, உள்ளம் மலர்ந்தது - அவர்தம் உள்ளங்களும் மகிழ்ந்தன, (எ - று.) நம்பியின் மேனியில் புத்தொளி தவழ்ந்தது; மகளிர் இடத்தோள் துடித்தன; வாள் கூர்மையாற் பொலிவுற்றன; உளத்தே மகிழ்ச்சி முகிழ்த்தது, என்க. | ( 88 ) | | |
|
|