அச்சுவகண்டன் நாட்டில் நிகழ்ந்த உற்பாதம் | 1219. | 2அரசிளங் குமரனை யனற்று 3மாற்றலர் முரசினுண் மணியர 4வுறைந்த முத்தணி 5நிரைசுடர் நெடுங்குடை யகடு நெய்கனி பிரசங்கள் புரைபுரை விலங்கப் பெய்தவே. | (இ - ள்.) அரசு இளங்குமரனை - பயாபதி மன்னனின் இளைய மகனாகிய திவிட்டநம்பியை, அனற்று மாற்றலர் - வெகுள்விக்கின்ற பகைவருடைய, முரசினுள் மணிஅரவு உறைந்த - முரசமாகிய இசைக்கருவியினுள்ளே மணியையுடைய பாம்புகள் வதிந்தன, முத்துஅணி நிரைசுடர் நெடுங்குடை அகடு - முத்துக்களால் அழகுறுத்தப்பட்ட ஒளிவரிசையினையுடைய நீண்ட குடையின் அகத்தே, நெய்கனி பிரசங்கள் - நெய்ப்புடைத்தாய்க் கனிதலையுடைய தேன், விலங்கப் புரைபுரை பெய்தவே - தொளைகடோறும் இடையிட்டுத் துளித்தன, (எ - று.) குடையினுள்ளே தேன்கூடு கட்டப்பட்டன என்க. இனி அச்சுவ கண்டன் திறத்து நிகழ்ந்த தீநிமித்தம் கூறுகின்றார். மாற்றலர் முரசினுள் அரவுறைந்தன; குடையினுள்ளே தேன் கூடுகட்டின, என்க. | ( 89 ) | | |
|
|