இதுவுமது | 1223. | உள்ளடி 3உமைத்துமைத் தழன்ற மேனியுங் கள்ளவிழ் கண்ணியுங் கரிந்த கண்களு மெள்ளுநர்க் கிடவயிற் றுடித்த வேழையர் வள்ளிதழ்க் கருங்கணும் வலந்து டித்தவே. | (இ - ள்.) உள்ளடி உமைத்து உமைத்து அழன்ற - ஆடவர்களின் உள்ளங்கால்கள் தினவெடுத்துத் தினவெடுத்து எரிவுற்றன, மேனியும் - உடலும், கள்ளவிழ் கண்ணியும் கரிந்த தேன் துளிக்கும் மலர்மாலைகளும் கருகிப்போயின, எள்ளுநர்க்கு - திவிட்டன் முதலியோரை இகழ்கின்ற விஞ்சையர்க்கு, கண்களும் இடவயின் துடித்த - கண்கள் இடந்துடித்தன, ஏழையர் - மகளிர்களுடைய, வள்இதழ் கருங்கணும் - பெரிய இமைகளையுடைய கரிய கண்களும், வலம்துடித்த - வலப்பக்கத்தே துடித்தன, (எ - று.) உமைத்து - தினவெடுத்து: “உமைத்துழிச் சொறியப் பெற்றாம்“ என்றார் சீவகசிந்தாமணியினும். உள்ளடிக்கண் தினவெடுத்தது; உடலும் மாலையும் கருகின; ஆடவர்க்கும் மகளிர்க்கும் முறையே கண்கள் இடமும் வலமும் துடித்தன; என்க. | ( 93 ) | | |
|
|