விச்சாதரர் போர்க்குப் புறப்படுதல்

1227. ஆழியி னானது கூறலு மாயிடை
வாழிய ரோவென மால்வரை 5வாழ்பவர்
சூழிய 1வானைகள் மாவொடு தேர்பல
2தாழலர் பண்ணினர் தாமு மெழுந்தார்.
       (இ - ள்.) ஆழியினான் அது கூறலும் ஆயிடை - அச்சுவகண்டன் அம்மொழி
கூறியவுடனே, மால்வரை வாழ்பவர் - பெரிய மலையிடை வாழும் மறவர்கள், வாழியரோ
என - வாழ்க என்று அச்சுவகண்டனை வாழ்த்தி, சூழிய ஆனைகள் மாவொடு பல தேர்
பண்ணினர் - நெற்றிப்பட்டத்தையுடைய யானைகளையும், குதிரைகளையும் பலவாகிய
தேர்களையும் ஒப்பனை செய்தனராய், தாமும் தாழலர் எழுந்தார் - தாங்களும்
காலந்தாழ்த்தாமல் விரைந்து போர்க்குப் புறப்பட்டனர், (எ - று.)

(1226) இச்செய்யுள்களும் (1227) அடுத்த செய்யுளும் - ஓர் ஏட்டுச் சுவடியில் முன்பின்
மாறியுள்ளன என்ப. உடனே மன்னர்கள் படை பண்ணுறுத்தி, விரைந்து போர்க்
கெழுந்தனர், என்க.

( 97 )