அச்சுவகண்டன் படை சுரமைநாட்டினை எய்துதல் | 1230. | பொன்றவழ் தேர்கலி மாவொடு 1போதக மென்றிவை யெங்கு மிடம்2பிறி தின்றி நின்றன நின்றது வாட்படை யப்படை 3சென்று பெருந்திசை யார்த்தனர் சேர்ந்தார். | (இ - ள்.) பொன் தவழ் தேர் கலிமாவொடு போதகம் - பொன்னிறம் தவழ்கின்ற தேர்களும் புரவிகளோடு யானைகளும், என்று இவை எங்கும் இடம் பிறிது இன்றி நின்றன - என்று கூறப்பட்ட இம்மூவகைப் படைகளும் தாந்தாம் நின்றவிடமன்றி இயங்குதற்குப் பிறிதிடம் எவ்விடத்தும் பெறாமையால் நின்றபடியே நின்றன, வாள்படை நின்றது - வாளேந்திய காலாட்படை முன் அணியில் நின்றது, அப்படை - அக்காலாட்படை மறவர், சென்று பெருந்திசை ஆர்த்தனர் சேர்ந்தார் - போய்ப் பெரிய திசைகள் அதிர ஆரவாரித்துச் சுரமை நாட்டை எய்தினர், (எ - று.) தேரும் யானையும் குதிரையும் நெருங்கி இயங்க இடம் பெறாமல் நின்றன; முன்னின்ற காலாட் படை. சுரமைநாட்டை எய்திற்று. | ( 100 ) | | |
|
|