அருக்க கீர்த்தியின் போர்த்திறம் | 1240. | ஆரழ லான்பெய ரானணி வெஞ்சிலை போரழல் வார்கணை மாரி பொழிந்தது சீர்கெழு விஞ்சையர் செந்தடி நுந்துபு நீர்கெழு வெள்ள நிரந்ததை யன்றே. | (இ - ள்.) ஆர் அழலான் பெயரான் அணி வெஞ்சிலை - பொருந்திய தீப்பிழம்பாயுள்ள கதிரவனுடைய பெயரையுடையவனாகிய அருக்ககீர்த்தி என்பவனுடைய அழகுடை வெவ்விய வில், போர் அழல் வார்கணை மாரி பொழிந்தது - போரின் கண்ணே நெடிய தீக்கணைகளை மழைபோலப் பொழிந்ததாக, சீர்கெழு விஞ்சையர் - புகழ்மிக்க விச்சாதரருடைய, செந்தடி - செந்நிறமான ஊன்றிரளை வரன்றிக்கொண்டு, நீர்கெழு வெள்ளம் - குருதிநீர் பெருக்காலுண்டாய வெள்ளம், நிரந்ததையன்றே - பரவலாயிற்று, (எ - று.) அருக்ககீர்த்தி கணைமாரி பெய்தவுடன் செவ்விய ஊன்றிரளோடே குருதி வெள்ளம் ஓடிற்றென்க. | ( 110 ) | | |
|
|