1244. தூணிமு கத்தது 3சோர்விலொர் கையொரு
பாணிமு கத்தது 4பண்புறு வெஞ்சிலை
வேணுமு கத்தது மண்டலம் வெங்கணை
காணுமு கத5தது வோவுணர் காலே.
     (இ - ள்.) சோர்வுஇல் ஒர்கை - தன் தொழிலில் மடிவில்லாத அருக்ககீர்த்தியின்
கைகளுள் ஒன்று, தூணிமுகத்தது - இடையறாது அம்புக்கூட்டின்கண் காணப்பட்டது
பண்புறு வெஞ்சிலை - விற்படைக்குரிய பண்புகள் அனைத்தும் உடைய வெவ்விய வில்,
ஒரு பாணிமுகத்தது - மற்றொரு கையகத்தே காணப்பட்டது, வேணுமுகத்தது மண்டலம் -
அவ்வில்லிடத்தே இடையறாதொரு வட்டவடிவமே காணப்பட்டது, உணர்காலே -
ஆராய்ந்துணரும்பொழுது, வெங்கணை காணும் முகத்ததுவோ - வெவ்விய கணைகளோ
வெனில் எம்மனோரால் கண்டுரைக்கும் தன்மையவல்ல, (எ - று.)
பாணி - கை. அருக்ககீர்த்தியின் ஒரு கை இடையறாது தூணியிற் காணப்பட்டது, மற்றொரு கையில் வில் தோன்றிற்று, வில் வட்டமாகவே காணப்பட்டது, அம்புகளே காணப்படும்
அளவினவல்ல, மிக்கன என்க.

( 114 )