1249. | இடுதவி சொடுதொடர் 1பிரிய 2வெந்தகத் தடுசரம் படுதொறு மலறி வாலதி நெடிதென நிறுத்திநீ ருகுத்து நீள்செவி மடிதர முடுகின மான யானையே. | (இ - ள்.) இடு தவிசொடு - எருத்தின்மேல் இடப்பட்ட இருக்கைகளுடனே, தொடர்பு - வரிசையும், இரிய - குலைந்து ஒழியும்படி, அகத்து - தம் உடலின் ஊடே, அடுசரம் படுதொறும் - கொல்லுதலுடைய கணைகள் பாயுந்தோறும், வெந்து - மனம்வெம்பி, அலறி - பிளிறொலி செய்து, நீர் உகுத்து - கண்ணீர்சொரிந்து, நீள்செவி மடிதர - அச்சத்தால் நீண்ட செவிகள் மடிந்துகிடப்ப, வாலதி நெடிதென நிறுத்தி - தம் வால் நீளிது என்னும்படி தூக்கி, மானயானை முடுகின - பெரிய யானைகள் விரைந்து புறமிட்டோடின, ஏ : அசை, (எ - று.) பகைவர்கள் அணிவகுத்து நடத்திச் சென்ற யானைகள் கணைபடுந் தோறும், அலறிச் செவிமடிதர, வாலைத் தூக்கிக்கொண்டு உடைந்தோடின, என்க. | ( 119 ) | | |
|
|