இதுவுமது

1252. நூற்பயம் பலவொடு நுணங்கு கேள்வியே
போற்பயம் பலவொடு புகழ்க ளேதரும்
வேற்பயங் கொண்டனர் 1விரவ லார்நமர்
காற்பயங் கொண்டனர் கால வேலினாய்.
     (இ - ள்.) நூல் பயம் பலவொடு நுணங்கு கேள்வியே போல் - மெய்ந் நூல்களின்
பயன்கள் பலவற்றைத் தன்பாற் கொண்டு நுணுகிய கேள்விச் செல்வத்தைப்போன்று, பயம்
பலவொடு புகழ்களே தரும் - பல்வேறு பயன்களுடனே சிறந்த புகழையும் அளிப்பதாகிய,
வேல் பயம்கொண்டனர் விரவலார் - வேற்படையின் பயனாகிய வெற்றியை நம்
பகைவர்கள் கொள்வாராயினர், நமர் - நம் படைஞர்கள், கால் பயம் கொண்டனர் - வலிய
காலாற் பெறும் பயனாகிய தோற்றுப் புறமிட்டோடி உய்தலைப்பெற்றனர், காலவேலினாய் -
மறலிபோன்ற வேற்படையுடைய வேந்தே, (எ - று.)

அங்ஙனம் கூறுகின்ற தூதன், பகைவர் வேலாலாய பயனை அடைந்தனர்; நமர் காலாலாய
பயனை யடைந்தனர், என்றார் என்க, வேற்பயன் - வெற்றி. காற்பயன் - உடைந்தோடி
உய்தல்.

( 122 )