இதுவுமது | 1257. | பாழிப்போ ருடைந்தனர் பகைவர்க் கின்றென வாழிப்போர்த் தடக்கையாற் கவர்க ணீர்மையைத் தாழிப்1பேர் விலன்றம னொருவன் கூறினான் ஊழிப்பே ரெரியுணெய் 2யுகுத்த தொப்பவே. | (இ - ள்.) பகைவர்க்கு இன்று பாழிப் போர் உடைந்தனர் என - (அன்னராதலால்) நம் பகைவர்களுக்கு நம் மன்னர்கள் அப் பகைவரூர்க்கண்ணே போரிற் றோற்றோடினர் என்று, அவர்கள் நீர்மையை -அம் மன்னர்களின் தன்மையை, தாழிப் பேர்விலன் தமன் ஒருவன் - கும்பன் என்னும் பெயருடைய விற்படையையுடையான் ஒரு தூதன், ஆழிப் போர்த்தடக்கையாற்கு - ஆழிப்படையையுடைய போர் ஆற்றல் மிக்க பெரிய கையினையுடைய அச்சுவகண்டனுக்கு, ஊழிப் பேரெரியுள் நெய் உகுத்தது ஒப்ப - ஊழிமுடிவின்கண்ணுற்ற பெரிய நெருப்பில் நெய் சொரிந்ததே போன்று, கூறினான் - சொன்னான், (எ - று.) பாழி - பகைவர் ஊர். தாழி - கும்பம். தமன் - தமர் என்பதன் ஒருமை; தூதன் என்றபடி. ஊழிப்பேரெரி சுரமையிலிருந்து வந்த செய்திக்குவமை, நெய் இரதநூதபுரச் செய்திக்குவமை. | ( 127 ) | | |
|
|