மறவர் ஒழுக்கம்

1280. ஏற்றவ ரிமைப்பினு மிகழ்ந்தெறி தல்1செய்யார்
தோற்றவர் 2புறக்கெடையு நாணிமிக நோக்கார்
வேற்றவரை 3வீரநெறி காண்மினிது வென்று
தேற்றுவனர் போலவுணர் சென்றுதிரி கின்றார்.
     (இ - ள்.) ஏற்றவர் - தம்மோடு போர் ஆற்றுதற்கு எதிர்ந்தவர், இமைப்பினும் - தம்
கண்களை இமைத்துவிட்டாலும், இகழ்ந்து -ஆண்மையற்றவர் என அவரை இளிவரப் பேசி,
எறிதல் செய்யார் - அவரொடு படைகளை வீசிப் போர் ஆற்றாதொழிவாராய், தோற்றவர் -
தம்மொடு போர்செய்து தோல்வியுற்றவர், புறக்கொடையும் நாணி - புறங்கொடுத்து
ஓடுதற்குத் தாமே நாணி; மிக நோக்கார் - அவர்பாற் போரின் மிக்குச் சேறலையும்
விரும்பாதவராய், வேற்றவரை - தம் பகைவர்களை, இது வீரநெறி காண்மின் என்று -
எமது ஒழுக்கமாகிய இது, மறவர்க்குரிய அறநெறியாம் என்று அறியுங்கோள் என்று,
தேற்றுவனர்போல் - தம் செயலாலேயே தெளிவிப்பார் போன்று, அவுணர் சென்று
திரிகின்றார் - சில விச்சாதரர் சென்று போர்க்களத்தே சுற்றித்திரிவர், (எ - று.)

“விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்கண் அவர்க்கு“ (குறள் - 775)

என்பவாகலின் கண்ணிமைத்தாரையும் புறங்கொடுத்தாராகக் கருதி அவர்மேற்
படைவிடாராயினார் என்க. இன்னராகலின் தோற்றோடுபவர்க்குத் தாமே பெரிதும்
நாணுவாராயினர். மிக நோக்கல் - அவர் மேற் போர்த்தொடுத்தலைக் கருதுதல். அவுணர் -
விச்சாதரர். அவுணர் தானவர் என்பன விச்சாதாரரைக் குறிப்பனவாகச் சைன நூல்களுட்
காணப்படுகின்றன.

( 150 )