அரிசேனன் போர் மேற்கோடல்

1282. கேடக மிடத்தது 1வலக்கைகிள ரொள்வா
ளாடக மடுத்தவணி பூணனலர் தாரான்
றோடக மடுத்த2துதை கண்ணியொடு துன்னா
ரூடக மடுத்தொருவ னுந்திநனி வந்தான்.
     (இ - ள்.) ஒருவன் - ஒரு சிறந்த போர் மறவன், இடத்தது கேடகம் - தன்
இடக்கையின்கண் கிடுகுபற்றியவனாய், வலக்கை - தன் வலக்கையில், கிளர் ஒள்வாள் -
மன எழுச்சிக்குக் காரணமான ஒளிமிக்க வாட்படையுடையனாய், ஆடகம் அடுத்தஅணி
பூணன் - பொன்னாலியன்ற அழகிய அணிகலன்களையும், அலர் தாரான் -
மலர்மாலையையும் அணிந்தவனாய், தோடு அகமடுத்ததுதை கண்ணியொடு - இதழ்களால்
செறிவுடைய முடிமாலையைச் சூடியவனாய், துன்னார் ஊடுஅகம் அடுத்து - பகைவருடைய
அணியினூடே புகுந்து, உந்தி - அவர்களை வெருண்டடோடச் செய்து, நனி வந்தான் -
விரைந்து போர் ஆற்றியபடியே வருவானாயினன், (எ - று.)
ஒருவன் என்றது அரிசேனனை. ஒருகையில் கிடுகுபற்றி ஒரு கையில் வாள்கொண்டு
அணிகலன்களையும் மாலையையுமுடைய ஒரு மறவன் தமியனாய்ப் பெரும்படையை
ஊடறுத்துப் போராற்றி வந்தான் என்க.

( 152 )