1299. 1பொன்னங் குன்றவன்
மின்னும் வாளினன்
மன்னன் றோழனாம்
முன்னி வந்தனன்.
     (இ - ள்.) மின்னும் வாளினன் - சுடரும் வாளையுடைய, பொன்னங்குன்றவன் -
சக்கிரவாளத் தலைவனாகிய, மன்னன் தோழனாம் - அருக்க கீர்த்தியின் அன்பனாவான்,
முன்னி வந்தனன் - போரின்கண் முற்பட்டு வந்தான், (எ - று.)
இந்திரகாமன் அருக்க கீர்த்தியின் நண்பன். பொன்னங்குன்று - இமயமலை. ஈண்டு
அம்மலையின் ஒரு பகுதியாகிய இரதநூபுரச் சக்கிரவாளத்தை உணர்த்திற்று.

( 169 )