1300. | வந்த வன்பெய ரிந்தி ரன்னெனுங் கந்து கொல்களி றுந்து காமனே. | (இ - ள்.) வந்தவன் பெயர் - அவ்வாறு வந்த வீரன் பெயர் யாதெனில், கந்துகொல் களிறு உந்து - கட்டுத்தறியை முறிக்கின்ற ஐராவதம் என்னும் யானையைச் செலுத்தும், இந்திரன் எனும் காமனே - இந்திரன் என்று சொல்லப்படும் காமன் என்பான் (எனவே இந்திரகாமன், என்றபடி,) (எ - று.) கட்டுத்தறியை முறிக்கின்ற ஐராவதம் என்னும் யானையைச் செலுத்தும் இந்திரன் பெயரோடு காமன் என்னும் பெயரும் இணைந்த இந்திரகாமன் என்றபடி. | ( 170 ) | | |
|
|