இதுவுமது | 1311. | எரிபோல்வன சுரிபங்கியொ 4டிருள்போலிருண் மெய்யோ டரிபோலதி ரகல்வானுற நிமிராவடி 5புடையாப் பரிபோல்வன பிடியாவுட லடியாவிடை 6படுதேர் பொரிபோலெழ வுதையா7 விவன் வருகின்றதொர் பொலிவே. | (இ - ள்.) எரிபோல்வன சுரிபங்கியொடு - தீப்பிழம்பு போன்ற சுருண்ட தலைமயிர்க் கற்றையோடே, இருள் போல் - இருட்டினை நிகர்த்த, இருள் மெய்யோடு - இருண்ட உடலோடே, அரிபோல் அதிர் - முகில்போல முழங்கி, அகல்வான் உற நிமிரா - விரிந்த விசும்பளாவ உயர்ந்த உருப்படைத்து, அடி புடையா அடிகளாலே நிலத்தை அதிரப்புடைத்து, பரிபோல்வன பிடியா - புரவிகள் போன்றவற்றைப் பற்றிப் பிடித்து, உடல் அடியா - தன் உடலிலேயே மோதிக்கொன்று, இடைபடுதேர் - இவற்றிடையே அகப்பட்ட தேர்களை, பொரிபோல் எழ உதையா - நெற்பொரிபோன்று துள்ளி எழும்படி காலாலே உதைத்து, இவன் வருகின்றது ஓர் பொலிவு - இவ்விஞ்சையன் போர் ஆற்றிவரும் ஓர் அழகு (இவ்வாறிருந்தது,) (எ - று.) (1308) எனவுரையா, பின்செல, விளியா (1309) பறியா, அவை கறியா, வாள் இடையிடையிட்டு உருவா, உயிர் பருகா, உருவா செறியா, (1310) நிமிரா அடிபுடையா, பிடியா, அடியா, உதையா, இவன் வருகின்றதொர் பொலிவே, என இயைத்துக் கொள்க. | ( 181 ) | | |
|
|